ஏனையா? குண்டும் கொலையும் என்றுலகம் கொடூர வழியிற் செல்வதனைக் கண்டு காணா திருப்பதுஏன்? காரணம் சொல்வாய் ஐ. நா. வே!                1   உலக ஒழுங்கை நிலைநாட்டும் ஓரிட மாகத் உனைக்காட்டும் உலக அமைப்பாம் ஐ. நா. வே! ஊமை யானது ஏனையா?                        2   திட்ட மிட்டோர் இனஅழிப்பைச் செய்த அரசிற் குதவியன்று கட்டம் கட்டமாய் அழிக்கக் காரண மானீர் ஏனையா?                            3   மனித நேயம் பேசிடுவோர் மானிட உரிமைக் குரல்தருவோர் தனிமைப் படுத்தி ஓரினத்தை சாகடித் திடஏன் விட்டீர்கள்?                     4…