வேண்டா வரன் கொடை!       பேயும் இரங்குமாம் பெண்ணென்றால் ! கருப்பிணித் தாயோ கருவழிப்பாள்  தான்விரும்பி !  – காயிலே பெண்கருவைத் தாயழித்தால் பின்னெங்கே ஆண்வருக்கம் ? கண்ணிரண்டும்  போன கதை !   ஈழத்தில் இட்டதீ சீதைக்கு ! எழில்மதுரை சூழத்தீ  இட்டது கண்ணகிக்கு ! – வாழாது மீண்டும் நகைச்சண்டை !  மேனியில்தீ  தங்கைக்கு ! வேண்டாம் வரதட் சணை !   தாலிகட்ட நூறுபவுன் ! தாயாக்க வேறுபவுன் ! கூலிமுதல் தந்தால்மூ கூர்த்தமெனும் – வாலிப ஆண்மகனும்…