கடந்த வாரம், ஆடி 4, 2045, சூலை 20, 2014 ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணிக்கு கனடியத் தமிழர்கள் கருப்பு யூலையின் 31 ஆம் ஆண்டு நெருப்பு நினைவுகளை எழுச்சியோடு ஃச்கார்புரோ நகரில் உள்ள அல்பேர்ட் கம்பல் சதுக்கத்தில் நினைவு கூர்ந்தார்கள். இந்நிகழ்வில் பல்வேறு வேற்றின அரசியல் ஆன்றோர்களும் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் யாவரும் தம் உரையில் தமிழர்களின் துன்பங்களில் பங்கெடுப்பதாகவும் தோளோடு தோள் நிற்கும் தோழர்களாக, தமிழ் மக்கள் துயர் தீர்க்க என்றும் தாம் இருப்போம்…