(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.19. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 20. அழுக்கா றொழித்தல் (அழுக்காறு- பொறாமை) அழுக்கா றயலா ராக்கத்திற் புழுங்கல். அழுக்காறு என்பது அடுத்தவர் பெற்றுள்ள செல்வத்தை நினைத்து உள்ளூர வருந்துதல் ஆகும். அழுக்கா றுறலினோ ரிழுக்கா றிலதே. அழுக்காறு கொள்வதைவிடப் பெரிய குற்றம் இல்லை. அழுக்கா றதுபோ லழிப்பதொன் றின்றே. பொறாமையைப் போல் அழிவை ஏற்படுத்தக் கூடியது வேறு ஏதும் இல்லை. அழுக்கா றுளவரை யொழுக்கா றிலையே. பொறாமை உள்ளவனிடத்தில் நல்லொழுக்கம் இருக்க இயலாது. அழுக்கா றுடையார்க் காக்கமின் றாகும். அழுக்காறு…