அவர்கள் வருகிறார்கள்!    வினையை விதைத்துத் திணையை அறுத்தவர்கள் வருகிறார்கள் வருகிறார்கள்   குறிஞ்சியைக் குப்பையாக்கினார்கள் முல்லையை ஆதியோகி ஆக்கினார்கள் மருதத்தை உந்துகளில் ஏற்றினார்கள் நெய்தலைக் கூவமாக்கினார்கள் பாலையைப் பாழாக்கினார்கள்   நாளெல்லாம் பொழுதெல்லாம் வினைகளை விதைத்துத் திணைகளை அறுத்தவர்கள் வருகிறார்கள் வருகிறார்கள்   கானுறு வேங்கையைக் ‘காசு’ க்குப் பிடித்தார்கள் கழிவுப் பொந்துகளில் எலிகளென வளர்த்தார்கள் வெண்குருதியைக் குடத்தினில் வாங்க நம்குருதியையே சிந்த வைத்தார்கள்   ஊன்துவை அடிசில் உண்டு தேள்கடுப்பன்ன ஊறல் மாந்தி தெளியாச் சிந்தனை கொண்டு திரண்டு வருகிறது கூட்டம்…