(அதிகாரம் 036. மெய் உணர்தல் தொடர்ச்சி)  01. அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 037. அவா அறுத்தல்  பெரும்துன்பம் தருகின்ற பேராசைகளை,    முழுமை யாகவே அறுத்[து]எறிதல்.   அவாஎன்ப, எல்லா உயிர்க்கும்,எஞ் ஞான்றும்,      தவாஅப் பிறப்(பு)ஈனும் வித்து.      தொடரும் பேராசைதான், எல்லா        உயிர்களின் பிறப்புகட்கும் விதை.   வேண்டும்கால், வேண்டும் பிறவாமை; மற்(று)அது,      வேண்டாமை வேண்ட வரும்.          விரும்பின், பிறவாமையை விரும்பு;        விருப்புக்கெடின், இல்லை பிறப்பு.   வேண்டாமை…