ஆங்கிலக் கல்வியால் பயனில்லை கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர்பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்; அணிசெய் காவிய மாயிரங் கற்கினும் ஆழ்ந்தி ருக்குங் கவியுளம் காண்கிலார்; வணிக முப்பொரு ணூலும் பிதற்றுவார்; வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்; துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள் சொல்லு வரரெட் டுணையப்பயன் கண்டிலார் பாரதியார் பாரதி தன்வரலாறு (சுயசரிதை)