வினா 4: இந்தி மொழியால் எங்காவது ஓர் இடத்தில் தமிழ்மொழி மறைந்திருக்கிறதா? விடைகள்: வட்டார மொழிப்பற்று இந்தியைப் புகுத்துவதற்குத் தடையாயிருக்கும் என்று அரசினர் கருதுவதால், தமிழ் மொழிப் பற்றூற்றும் இலக்கியப் பகுதிகளையும், தமிழ்ப் பற்றையும் தடை செய்கின்றனர். தற்போதைய தமிழ் நாட்டு முதலமைச்சர் ‘வாழிய செந்தமிழ்’ என்ற பாரதியின் பாட்டைப் பள்ளிகளில் பாட வேண்டாமென்று வேண்டியதும், இளங்கலை, இளமறிவியல் மாணவர்க்குத் தமிழ் இலக்கியப் பகுதியில் அமைந்த ‘கால்கோட்காதை’யை நீக்கியதும் இதற்குச் சான்று. இவ்வாறு மொழிப் பற்றூட்டும் பகுதிகளை நீக்குவதால் அவ்விலக்கியப் பகுதிகள் மறைய…