சென்னை மடிப்பாக்கத்தில்   புத்தகக் காட்சி சென்னை மடிப்பாக்கத்தில்  வைகாசி 07, 2050 சனி 20.04.2019 அன்று மாலை 5.00 மணியளவில் கணேசு மகால் மண்டபத்தில் புத்தகக்காட்சி தொடங்கியது. உலகப்புத்தக நாளை முன்னிட்டு மக்கள் வாசிப்பு இயக்கம் நடத்தும் இதன் தொடக்க விழாவில் இதன் நிறுவனர் எழுத்தாளர் வீரபாலன் வரவேற்புரையாற்றினார். திரைப்பட நடிகர் அருள்மணி புத்தகக்கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். இயக்குநர் இராசி அழகப்பன் விற்பனையைத் தொடக்கி வைத்தார். எழுத்தாளர் பசுமைக்குமார், இதழாளர் சுந்தர புத்தன், நடிகர் எழுத்தாளர் கணேசு பரபு ஆகியோர் தொடக்கத்தில் புத்தகங்கள் வாங்கினர்….