அழிமொழி சமற்கிருதப் பற்றாளர்கள் தரும் தொடர் துன்பம்  சமற்கிருதத்தால்  – சமற்கிருதப் பிழைப்புவாதிகளால் – நாம் காலந்தோறும் அடையும் தீங்குகள் பெரிதினும் பெரிது! அதன் தீமை குறித்தும் தமிழ்த்தேசியத்தைப் பேண வேண்டிய பாங்கு குறித்தும் நாம் விழிப்புணர்வு அடைந்துவரும் வேளையில், தமிழர்க்கெனத் தனியரசு இன்மையால் சமற்கிருதத்திணிப்புகளால் நாம் அடையும் இன்னல்கள் மிகுதியினும் மிகுதி! சமற்கிருதத்திணிப்பால் நாம் மொழித்தூய்மையை இழந்தோம்! தமிழ்பேசும் மக்கள் தொகையளவில் குறைந்தோம்! தமிழ்பேசுவோர் நிலப்பரப்பைப் பெரிதும் இழந்தோம்! தமிழ்த்தேசிய உணர்வை இழந்தோம்! பிறப்பு முதல் இறப்பு வரை, தமிழ், தமிழ், தமிழ்…