வேலையில்லாத் திண்டாட்டம் – இலக்கியச் சான்று   நம் குமுகாயச் சூழலில் ஒரு நிறைவான வாழ்வு வாழ அனைவர்க்கும் கல்வியறிவு இன்றியமையாதது. கல்வியை முறையாக, ஆழமாகப், பல அல்லல்கட்கிடையே (பெற்றோரை வருத்தி, அவர்கள் தேவையைக் குறைத்து) 4, 5 பட்டங்கள் பெற்றாலும், நாட்டில் வேலை கிடைப்பது எளிதான ஒன்றல்ல என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒரு பெண்மணி தன் அணிகலன்களை விற்று, இருவேளை உணவை ஒரு வேளையாகக் குறைத்துத் தன் பிள்ளைகளைப் படிக்க வைத்தாள். படிப்புக்கேற்ற வேலை மகனுக்குக் கிடைக்கவில்லை. என்னிடம் தன் பெரிய…