இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்! புதுக்கோட்டை மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்   இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மாசி 17, 2047 / 29.02.2016 அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவதைக் கண்டித்தும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், சிறைப்பிடித்து வைத்துள்ள விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்தும் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம், காரைக்கால், சென்னை,…