சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 5 ஊர்சுற்றும், ஓரிடத்தில் உன்னதமாய் நில்லாதாம், தார்வேந்தன் போலத் தலைதூக்கும்-மார்தட்டும் சண்டையிடச் சக்திகொண்டு சாதிக்கும், கோமாடும் விண்ணேர் இளைஞனும் ஒன்று. பொருள் கோயில்மாடு & இளைஞன். 1) ஊர்சுற்றித் திரியும். 2) ஒரிடத்தில் நிற்காமல் அங்குமிங்குமாக அலையும். 3) மன்னன் தலைதூக்கிப் பார்ப்பதுபோல் பார்க்கும் 4) எதிரி யாரெனினும் மார்தட்டிச் சண்டையிடும். 5) வெற்றி பெறும்வரையில்  போராடும் எனவே, கோயில் மாடும் இளைஞனும் ஒன்றாம்