இன்றியமையா உணவுப் பொருள்களை இலவசமாக வழங்குக! – கு.இராமக்கிருட்டிணன்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் இன்றியமையா உணவுப் பொருள்களை நியாய விலைக் கடைகளில் இலவசமாக வழங்க வேண்டும் என்று மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலர் இராமக்கிருட்டிணன் வலியுறுத்தியுள்ளார்.   இது தொடர்பாகச் சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:   வெள்ளத்தின் காரணமாக ஏராளமானோர் தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி இன்றியமையாப் பொருள்களின் விலை மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.   இந்த நிலையில், இலவசப் பேருந்து பயண வசதி செய்துள்ளதுபோல…