நூலை ஆராய்ந்து ஏற்க!   தொன்மையாம் எனும் எவையும் நன்றாகா; இன்று தோன்றிய நூல் எனும் எவையும் தீதாகா; துணிந்த நன்மையினார் நலங்கொள்மணி பொதியும் அதன் களங்கம் நவையாகாது என உண்மை நயந்திடுவர்; நடுவாம் தன்மையினார் பழமை அழகு ஆராய்ந்து தரிப்பார்; தவறு நலம் பொருளின்கண் சார்வு ஆராய்ந்து அறிதல் இன்மையினார் பலர் புகழில் ஏத்துவர் ஏதிலர் உற்று இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கு என ஒன்று இலரே   -உமாபதி சிவனார், சிவப்பிரகாசம், அவையடக்கப்பாடல்