திருக்குறள் அறுசொல் உரை : 124. உறுப்பு நலன் அழிதல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை : 123. பொழுது கண்டு இரங்கல் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் 15.கற்பு இயல் 124.உறுப்பு நலன் அழிதல் பிரிவைப் பொறாத தலைவியது கண்,தோள் நெற்றிஅழகு கெடுதல். (01-07 தலைவி சொல்லியவை) . சிறுமை நமக்(கு)ஒழியச், சேண்சென்றார் உள்ளி, நறுமலர் நாணின கண். பிரிவால் அழகுஇழந்த கண்கள், அழகுக்குவளை கண்டு வெட்கும். நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும், பசந்து பனிவாரும் கண். நிறம்மாறி நீர்சிந்தும் கண்கள்,…