எழுத்தாளர்களைக் குமுகம்(சமூகம்)  ஏற்க வேண்டும்!   இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடாக எசு.செல்வசுந்தரியின் ‘கை நழுவும் சொருக்கம்‘ (சிறுகதை நூல்) ‘உன்னை விட்டு விலகுவதில்லை‘ (புதினம்) ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா திருச்சி மாவட்ட ஆட்சியர்  முனைவர் கே.எசு.பழனிச்சாமி தலைமையில் எழுத்தாளர் மதுரா முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது   விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தர்பகராசு, வரலொட்டி ரெங்காசாமி, குமாரசாமி, பாசுகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் இராச்சா, திருநங்கை பிரியாபாபு ஆகியோர் நூல் ஆய்வு செய்தனர் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் பிரபஞ்சன்…