திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 6 (நிறைவு)

திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 6 (நிறைவு) (மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி) 10.5. இடைக்காடரது பாடற்கொடை — 54       கடுகைத் துளைத்[து]ஏழ் கடலைப் புகுத்திக்          குறுகத் தறித்த குறள்   பொருள் உரை      திருக்குறளின் சொற்சுருக்கத்தையும், பொருட்சுருக்கத்தையும் ஆய்ந்தால், கடுகின் நடுவே துளைபோட்டு, ஏழு கடல் நீரையும் அத் துளைவழி உட்செலுத்தி, அளவில் குறுகி இருக்கும்படித், தறித்து வைத்தது போன்ற வடிவினது திருக்குறள். நுட்பங்கள்      சொல்: கடுகு கடுகு =…

திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 5

(மார்கழி 20, 2045 / சனவரி 04, 2015 தொடர்ச்சி) 10.3. கபிலர் பாடல் — 05         தினைஅளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட          பனைஅளவு காட்டும் படித்தால் — மனைஅளகு          வள்ளைக்[கு] உறங்கும் வளநாட..! வள்ளுவனார்          வெள்ளைக் குறட்பா விரி ] பொருள் உரை      தினைஅரிசியின் அளவுக்கும் ஒப்பாகாத மிகச் சிறிய புல்லின் நுனியின்மேல் உள்ள பனித்துளி நெடிது உயர்ந்த பனையின் உருவத்தைத் தன்னுள் கொண்டு காட்டும். அதுபோல் போல், திருவள்ளுவர்…