(நான் கண்ட வ. உ. சி. – கி.ஆ.பெ. 1 /2 தொடர்ச்சி) நான் கண்ட வ. உ. சி.    வெள்ளையர் கப்பல்கள் துரத்துக்குடியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் கட்டணத்தை உயர்த்தித் தமிழ் நாட்டு வணிகத்திற்கே கேடு விளைவித்தன. இதனை யறிந்த பிள்ளை அவர்கள், அவர்களோடு போராடியும் நியாயத்திற்கு இணங்க மறுத்ததனால், அவர்களோடு போட்டியிட்டுத் தானே ஒரு கப்பலை ஓட்டித் தமிழ் நாட்டு வணிகத்திற்குத் தொண்டு செய்தார்கள். அவர் ஒரு தொழிலாளர் தலைவர். தொழிலாளர் போக்கைத் தொடர்ந்து போகும் தலைவராயில்லாமல் தொழிலாளரைத் தன் போக்கில் நடத்திச்…