(திருக்குறள் அறுசொல் உரை – 107. இரவு அச்சம் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 108. கயமை மானுட அறங்களைப் பின்பற்றாத கீழ்மை மக்களது இழிதன்மை.   மக்களே போல்வர் கயவர்; அவர்அன்ன       ஒப்பாரி யாம்கண்ட(து) இல்.  மக்கள்போல், தோன்றும் கயவரோடு ஒப்பாவார், எவரும் இலர்.   நன்(று)அறி வாரின், கயவர் திருஉடையார்;       நெஞ்சத்(து) அவலம் இலர். நல்லாரைவிடக் கீழோர் பேறுஉடையார்; ஏன்எனில், கீழோர் கவலைப்படார்.   தேவர் அனையர் கயவர்,…