(தோழர் தியாகு எழுதுகிறார் 17.2: ஏ. எம். கே. நினைவாக (2) தொடர்ச்சி- தொடர்ச்சி) கரி படுத்தும் பாடு காலநிலை மாற்றம் வறுமைக்கும் அடிமை முறைக்கும் காரணமாகி மாந்த வாழ்வைச் சீர்குலைக்கக் கண்டோம். ஆனால் எந்த உயிரினத்தையும் அது விட்டு வைப்பதில்லை. காலநிலை மாற்றம் இப்படியே தொடருமானால் கடல்சார் உயிர்க் கோளங்கள் இந்த நூற்றாண்டு முடிவதற்குள் உலகளாவியச் சிதைவுக்குள்ளாகும் என்று பிரின்சுடன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. மூ ஊரிகள் (Dinosaurs) அழிந்த பிறகு ஏற்படும் பேரழிவாக இஃதமையும். புவி வெப்பமாகும் வேகத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால் புவிக்…