கலங்காதே பெண்ணே! விடியலில் வருவான்! மெலி இணர் நவிரல் ஒள் வீ  சிதற  வான் அதிர் உடுக்கள் வெள் நிலம்  வீழ்ந்து பரந்து விழி விழி  உறுத்து  வியத்தல் அன்ன  நின்னைக்கண்டு  நெடுவெளி ஊழ்க்கும் மணியிழாய். வெங்கல் அருங் கடம் சென்றான் ஆங்கு   மீள்வழி நோக்கி வானப்பரவை  உன் விழி அம்பு கூர்த்த வடுக்கள்  எண்ணி எண்ணி புள்ளியிட்டாய் . அதனை அழித்திட வருவான் என்னே. கலங்கல் மன்னே.காலையும் விரியும். பொழிப்புரை  மெல்லிய பூங்கொத்து உடைய முருங்கை மரத்தின் ஒளிசிந்தும் சிறு பூக்கள் உதிர்ந்து தரையில் படர்ந்து கிடப்பது…