எமது போராட்டம்: வெறும் நிகழ்வா அல்லது பெருமைக்குரிய வரலாறா என்பதை நீங்கள்தான்  வரையறுக்க வேண்டும் – கலாநிதி இராம் சிவலிங்கம்   அணையாமல் இருக்க  காற்றோடு  போராடுவதை வாழ்வாகக் கொண்ட  மெழுகுவர்த்தி போல்,  ஈழம்வாழ்  எம் உறவுகளும் அடக்குமுறைக்கும், அரச பயங்கரவாதத்துக்கும் மத்தியிலே, சிங்கள அரசின் இன அழிப்பிலிருந்து  தம்மைத் தாமே காப்பாற்ற, போராட வேண்டிய துயரய நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு யாரப்பா காரணம்? தரமில்லா புலம் பெயர் அணிகளும், தகுதியில்லா அதன் தலைமைகளுமல்லவா? எமது பூமியையும், அதன் பூர்வீகக்குடிகளான எம் உறவுகளையும் நாளுக்கு நாள்…