–    திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன் 92802 53329     தாயுனைத் தொழுதுன் திருவடி பணிவேன்  தன்னலச் சேற்றினில் மாயேன்! கோயிலில் உறையும் கொற்றவை போலே   குடியினைக் காப்பவள் நீயே! சேயெமைக் காக்க சீரலொ மிழந்தாய்!   செல்வமே பிள்ளைக ளென்றாய்! ஓயுத லின்றி உழைப்பினைத் தந்தாய்!  உனக்கிலை ஒருவரு மீடே!   பற்பல தெய்வம் படைத்தன ரெனினும்  பண்புடை தாய்முதற்  தெய்வம் நற்றவம் செய்தேன் நானுனைத் தாயாய்  நல்லறப் பேற்றினால் பெற்றேன்!   வெற்றுரை யில்லை வெடித்தெழும் நெஞ்சின்   விழைவது அம்மையே…