கொள்கையை நெஞ்சினில் விதைத்திடுவாய்! நல்லவர் போலவே நகைத் திருப்பார் – சிலர் நாவினில் நஞ்சை விதைத்திருப்பார் . உள்ளவை யாவையும் கறந்தெடுப்பார் – அவர் உண்மையைச் சொல்வதாய் நம்ப வைப்பார் , பசுத்தோல் போர்த்திய புலியாவார். – சிலர் பாதகம் செய்வதில் நரியாவார். எரிகின்ற வீட்டுக்குக் கொள்ளி வைப்பார் – அவர் ஏதேனும் செய்தியை அள்ளி வைப்பார். நல்லவர் கெட்டவர் பகுத்தறிவாய் – நீயும் நான்கு குணத்தையும் பிரித்தறி வாய் . கோடரிக் காம்பினை முறித்திடுவாய்.- நல்ல கொள்கையை நெஞ்சினில் விதைத்திடுவாய். கவிஞர். ஏரூர்…