குடிப்பீரா உழவனின் கண்ணீர்?    அதிகார மேடையில் சதிராடும் பேய்களே அநியாயம் செய்யலாமா? – உங்கள் அலட்சிய வேள்விக்கு வேளாண் தோழர்கள் விறகாக எரியலாமா?   விதியற்றுக் கதியற்று உழவனும் துயரிலே வெந்துபோய்க்  கதறலாமா? -எங்கள் வேளாண் தோழர்கள் படும்பாட்டை இன்னமும் வேடிக்கை பார்க்கலாமா?   நதிநீரைக் கேட்பதும் கடன்நீக்கச் சொல்வதும் நாட்டோரின்   உரிமைதானே! -தீய நரிகளே உழவனின் கண்ணீரைக் குடிக்கவா நாற்காலி ஏறினீர்கள்?   சதிகாரக் கும்பலே கதியற்ற உங்களைச் சடுதியில் விரட்டுவோமே! -சற்றும் வெட்கமே இல்லாத வேதாந்தக் கூட்டமே விரட்டியே துரத்துவோமே!…