குதூகலித்தே ஆடுவாய் ! குதித்தாடிக் குதித்தாடிக், குதூகலித்தே ஆடுவாய் ! குமிழ்ச் சிரிப்புக் காட்டியே, குறுநகையும் புரிவாய் ! குதித்தாடும் காலமிது, குறை எதுவும் வைக்காதே ! சிறை பூட்டும் காலமதில், கால் விலங்கும் பூட்டிடுவார். எதற்கென்றும் அஞ்சாதே ! எவரிடமும் கெஞ்சாதே ! குமிழ்ச் சிரிப்பை சதங்கையாக்கி, குதூகலமாய் நடனமிடு ! – கே. கமலசரசுவதி