தோட்டக்கலையின் தாயகம் தமிழ்நாடே!   எந்தநாட்டின் பழைய மொழியினுள்ளும் இத்தகைய அரிய செய்திகளை அறிவிக்கத்தக்க பழஞ்சொற்கள் இல்லை. எந்த மொழியைப் பேசுவோரின் பழங்காலக் கலாச்சாரங்களிலும் தமிழரிடம் இருந்தன போன்ற தோட்டக்கலையின் தொடர்பான பழக்கவழக்கங்கள் இருக்கவில்லை. எனவே, தோட்டக் கலையின் தாயகம் தமிழ்நாடே என்பது உறுதி. அக்கலை, வரலாற்றுக்கு எட்டாத காலத்திலேயே தமிழரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவிவிட்டது. இப்பரவலுக்குக் காரணம் தமிழ் வணிகர் கடல் கடந்து தொலைவு நாடுகளுக்குச் சென்று வந்ததே. ச.கு.கணபதி: குமரிக் கண்டத் தமிழர்: பக்கம்.75