கூட்டம் போடும் கூச்சல்!    கூட்டம் போடும்  கூச்சலுக்கிணங்கி, கொடுக்கும் தீர்ப்பு அறமாமோ? ஆட்டம் போடும் தலைகளுக்கடங்கி, அடிமையாதலும் திறமாமோ? மாட்டிற்காகப் பொங்கும் மக்கள், மனிதரைக் கொல்தல் முறையாமோ? வேட்டை நாய்போல் வெறியும் திரும்பும், விண்ணின் அறத்தில் குறையாமோ? – கெருசோம் செல்லையா