நானேன் பறப்பேன் நராதிபனே! கொக்குப்பறக்கும் புறாப்பறக்குங் குருவிபறக்குங் குயில்பறக்கும் நக்குப் பொறுக்கிகளும் பறப்பர் நானேன் பறப்பேன் நராதிபனே திக்கு விசயஞ் செலுத்தியுயர் செங்கோல் நடாத்தும் அரங்காநின் பக்கம் இருக்க வொருநாளும் பறவேன் பறவேன் பறவேனே.   இராம கவிராயர்