கொன்றவர் எவரும் வென்றதில்லை! மரண ஓலம் கேட்கிறதே! – எங்கள் மனத்தை அதுதான் தாக்கிறதே இரண்டுங் கெட்ட நிலையினிலே – எங்கள் இதயம் இங்கே துடிக்கிறதே! வெடி குண்டு வைத்துத் தாக்காதே விடியலை எங்கும் போக்காதே தீவிரவாதம் ஒழிக ஒழிகவென தீட்டிய பாக்களை வெறுக்காதே! குழந்தைகள் செல்லும் வண்டியில்  கூடக் குண்டுகள் வைப்பதில் நியாயமென்ன? எதிரியைக் கொல்லும் கொலைவெறியதனால் எவரையும் அழிப்பதில் நீதி என்ன? மனித மனங்களில் வன்மங்கள்- இதை மாற்றிட வேண்டும் வாருங்கள்! உலகம் அழிவதைப் பாருங்கள்- இதை ஒவ்வொருவருமே உணருங்கள்! சங்கடம்…