இளையவன் – செயா  மதுரை பெரியார் ஆண்டு 135 தொ.ஆ.2878  தி.ஆ. 2045 சுறவம் ( தை ) 16            29–01–2014 ஆழி   நீர்ப்பரப்பில்   ஆடுகின்ற  நிழலாய் ஊழிப்   பெருவாழ்   விலுழன்று  உதட்டாலே வாழி   வாழியெனும்  வாழ்த்துக்கு  வயமாகித் தாழியள   வாய்த்தாங்கும்  துன்பச்   சுமைதனை மறப்பதற்   கோர்நாள்   மல்லைநகர்  சென்றிந்தேன் பிறப்பதன்  பெரும்பயனை  பிற்றைநாள்   மக்களுக்கு உரைப்பது  போன்றுருவச்  சிலைகள்  என்னுளத்துச் சிறுகு   மறக்கப்   பெருந்துணை  ஆயிற்றே! மல்லை   நகரின்  மாண்புறு  துறைஅன்று சொல்ல  ரியபொருட்  களைச்சேர்த்  தனுப்பி இல்லை  எமக்கீடென  எழிலுட …