உதிக்கும் சூரியனே! பனியை உருக்க வரும் சூரியன்போல்பகலெல்லாம் உழைத்து ஓய்வெடுடாபனிமலையையே உருக்க நீ நினைத்தால்பகலவனாய் வானில் நீ எரிந்திடடா! சிறுகச் சிறுக வரும் வியர்வைத்துளிஉன் உழைப்பிற்குக் கிடைத்த பொன்துளிகள்பெருகி பெருகி வரும் ஊனின் வலிஉன் உடலை செய்யும் உறுதியடா! ஓடும் ஓட்டமும் ஓயாது வாழ்வுமுடியாப் பாதையின் தொடர்ச்சியடா,வாழ்வில் கடினப் பாதைகள் பலவுண்டுஅதைக் கண்கள் மூடாமல் ஓடிடடா,கடினப் பாதைகளில் ஓடிப் பழகிவிட்டால்இனி எந்தப் பாதையிலும் ஓடிடலாம்! சூழும் துன்ப இருளை நீ நீக்கிடவேபுது சூரியனாய் வானில் உதித்திடடா,சிகர தூரம் அது மிகத் தூரமில்லைஉன் புன்சிரிப்பால் அதை…