குறள் நூல் வெளியீடும் அறிமுகமும், ஐந்தாவது திருக்குறள் மாநாடு, சிகாகோ

குறள் நூல் வெளியீடும் அறிமுகமும் ஐந்தாவது திருக்குறள் மாநாடு பங்குனி 23 -25, 2055 **** 5-7/04/2024 சிகாகோ அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு வணக்கம். வருமாண்டு (பங்குனி 23-25, 2055 **** 5-7/04/2024)  சிகாகோவில் நடைபெற உள்ள ஐந்தாவது திருக்குறள் மாநாட்டை முன்னிட்டுத் திருக்குறள் நூலரங்கு நிகழ உள்ளது. இனித் திருக்குறள் தொடர்பான நூல்கள் வெளியிடுநர் அவற்றின் வெளியீட்டிற்கு இம்மாநாட்டு அரங்கைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன்னர்த் திருக்குறள் தொடர்பான நூல்களை வெளியிட்டவர்கள் இம்மாநாட்டை அவரவர் நூல்களின் அறிமுக நிகழ்வாகக் கட்டணமின்றிப்…

என்றாலும் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

என்றாலும் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! இன்று(ஆடி 19 / சூலை 4) முதல் நான்கு நாள் அமெரிக்க நாட்டில் சிகாகோவில் உலகத்தமிழர்கள் ஒன்றுகூடும் தமிழர் விழா நடைபெறுகிறது. தமிழறிஞர்களைப் புறக்கணித்துள்ளதாக உள்நாட்டுத் தமிழறிஞர்கள் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தொடர் படைப்பாளர்கள் வரை வருத்தம் உள்ளது. என்றாலும், சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! குழுக்கள் பொறுப்புகளில் ஈழத்தமிழர்களைப் புறக்கணித்ததாக அவர்களிடையே பெரும் ஆதங்கம் உள்ளது. என்றாலும் உலக மாநாட்டை நடத்துவது அரிதான செயல் என்ற அளவில் மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! கவியரங்கம், தமிழிசை, மரபிசை,…