(தோழர் தியாகு எழுதுகிறார் 49 தொடர்ச்சி) அன்பர்கள் எழுதுவதை வரவேற்கிறோம் அன்பர் சத்தியசீலனின் முதல் மடல் குறித்து நலங்கிள்ளி எழுதுகிறார்:“திமுகவின் ஈழ நிலைப்பாட்டில் சற்று மாற்றம் ஏற்பட்டது என்பது இந்திய முன்னாள் தலைமையமைச்சர் இராசீவு காந்தி படுகொலைக்குப் பின்னரே” என்று சத்தியசீலனே ஏற்றுக் கொள்கிறார். அப்படியானால் இராசீவு மரணத்துக்கும் திமுகவின் தமிழீழ நிலைப்பாடு மாறுவதற்கும் என்ன ஏரணப் பொருத்தம் இருக்க முடியும்? தமிழீழ நிலைப்பாட்டில் திமுகவின் கருத்து மாறி விட்டது என்ற பிறகு அந்த அமைப்பு மீது விமரிசனம் வரத்தான் செய்யும். அந்த விமரிசனங்களை…