சுவையமுதே ! தித்திக்கும் சொல்லோவியமே !   ஆதிமுதல் தாயே! அருந்தமிழே ! நல்வாழ்த்து ! சாதிவரு முன்னே தமிழ்நாட்டில் மக்கள்   பிறந்து சமத்துவமாய்ப் பேருலகில் வாழச் சிறப்புடனே பெற்றெடுத்த செந்தமிழே நல்வாழ்த்து !   கண்ணகியைப் பெற்றெடுத்துக் கற்பின் திறங்காட்டி மண்ணுலகைச் சீர்படுத்தும் மாணிக்கச் செந்தமிழே!   ஔவைமூ தாட்டி அறம்பாடக் கூழுட்டிச் செவ்வை புறவளர்த்த செந்தமிழே நல்வாழ்த்து !   போரில் புறங்கொடுத்த புல்லன் மகனென்றால் மார்பறுக்கத் தான்துணியும் மங்கையினைப் பெற்றவளே !   தாய்நாடு வாழத் தனதருமைச் சுற்றமெலாம் போய் வீரப் போர்புரியப் போக்குந் திருமகளை   ஊட்டி…