சமற்கிருத ஆதிக்கவாதிகளான என். கோபாலசாமியும், இரா. நாகசாமியும் தமிழ்ச் செம்மொழி விருதுக்குழுப் பொறுப்பாளர்களா? செம்மொழி ஆய்வு மையம் தமிழை வளர்க்கவா? தகர்க்கவா? புல்லுருவிகளைப் பொறுப்பிலிருந்து நீக்கு! சென்னையில் நாளை பங்குனி 20, 2050 /03.04.2019) காலை 10.00மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம்! செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் அளிக்கப்படும் தமிழ்ச் செம்மொழி விருதுகளுக்கான தேர்வுக் குழுவில், தமிழ் மொழிக்கு எதிரான புல்லுருவிகளை இந்திய அரசு அமர்த்தியுள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், திருப்பதியிலுள்ள இராட்ரீய சமற்கிருத வித்தியா பீடப் பல்கலைக்…