வான்மிதந்து  சென்றடையும்  கதிரவனைத் தான்தழுவி  ஒளிஉமிழும்   தண்நிலவில் கண்நிறைந்த  காட்சிகாண  கடல்வெளியில் மண்மீது  படுத்தேன்என்  கண்முன்னே தொங்கிச்  சுழலும்இப்   பூமிப்பந்தில் தங்கிவாழும்  மக்கள்குலம்   தழைக்க பொங்கிவழியும்   அழகுடன்நம்  பூமித்தாய் இங்கிருக்கும்  மக்களுக்கே  படைத்தாள் குறிஞ்சிமுல்லை  குறையாத  மருதத்துடன்நாம் அறிந்த  நெய்தல்பாலை  எனப் படைத்தாளே ! ஐவகைநிலத்தை   அழகுடன்    பார்த்தேன் மூவகைத்   தமிழுடன்   முத்திரைபதித்து பாவகையுடன்  பைந்தமிழ்ப்  புலவர்கள் பாடக்கேட்டேன்  இயற்கை  எழில்பற்றி ! எங்கு   பார்க்கினும்   மக்களெல்லாம் பொங்கும்  மகிழ்ச்சியால்  பூரித்ததையும் வறுமையைப்  புறந்தள்ளி   வாழும் வளமையும்  கண்டேன்  நாட்டில் ! இயற்கை    அன்னை …