தமிழ்நலப்பணிகளைச் செயற்படுத்துக ! –புதுச்சேரி அரசிற்கு வேண்டுகோள்

        கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழ்நலப்பணிகளைச் செயற்படுத்துக ! தனித்தமிழ்இயக்கம், புதுச்சேரிஅரசு கலை,பண்பாட்டுத்துறை அமைச்சர்க்கு வேண்டுகோள்!         தமிழ்ப் பணி,கலை,இலக்கியப் பண்பாட்டுப் பணிகள் ஆகியவற்றைக் கடந்த பல்லாண்டுகளாகப் புதுச்சேரிஅரசு கலை,பண்பாட்டுத்துறை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டு விட்டது. அவை வருமாறு: தொல்காப்பியர்விருது10ஆண்டுகளுக்குமேல் வழங்கப்படவில்லை. 2. சிறந்த நுால்களுக்கான கம்பன் புகழ்ப்பரிசு, நேருகுழந்தைகள் விருது, போன்றவைபலஆண்டுகளாக வழங்கப்படவில்லை.  புதுச்சேரி எழுத்தாளரகளின் நுால்கள் நுாலகங்களுக்கு வாங்கப்படவில்லை.  கடந்த 25ஆண்டுகளாக ஒரு புதிய கிளைநுாலகம்கூடத் திறக்கப்பட வில்லை. 5. இருக்கும் நுாலகங்களுக்கு நுாலகர்கள் அமர்த்தப்படவில்லை. உரோமன் உரோலந்து…

திருக்குறள் முற்றோதல், தட்டாஞ்சாவடி

திருக்குறள் முற்றோதல், தட்டாஞ்சாவடி      புதுவைத் திருக்குறள் மன்றமும் தனித்தமிழ்இயக்கமும் இணைந்து திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியைத் தட்டாஞ்சாவடி சமரசசன்மார்க்க சங்கத்தில் நடத்தின.   தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் தலைமைதாங்கிப் பேசினார். புதிமத்தின் தலைவர் சுந்தரஇலட்சுமிநாராயணன் முற்றோதலைத் தொடங்கி வைத்தார். அறத்துப்பாலின் 38 அதிகாரங்கள் படிக்கப்பட்டன.   ஒருவர் சொல்ல மற்றவர் அதைத் தொடர்ந்து சொல்லித் திருக்குறள் படிக்கும் வாய்ப்பை மகிழ்வுடன் பயன்படுத்திக் கொண்டனர். இராசாராம்,பாலசுந்தரம், கடலுார் பா.மொ.பாற்கரன், வெல்லும் துாயதமிழ் ஆசிரியர் த.தமிழ்ச்செல்வி, தமிழ்த்தென்றல், அரங்கநாதன், சமரசசுத்தசன்மார்க்க சாதனைச் சங்கத்தின் செயலர் கோவிந்தசாமி,…

புதுச்சேரி தனித்தமிழ்இயக்கத்தின் தனித்தமிழ்ச் சிறுவர்நாடகப் போட்டி

தனித்தமிழ்ச் சிறுவர்நாடகப் போட்டி தனித்தமிழ் இயக்கம் நடத்துகிறது! பரிசு உரூபா 1000.00 கடைசிநாள்: மாசி 16, 2048 /  28.2.2017 சிறுவர்கள் படித்தும் நடித்தும் மகிழ்வதற்கேற்ற 3 பக்க நாடகங்கள் 2 எழுதி அனுப்ப வேண்டும்! முதற்பரிசு உரூபா 300.00 இரண்டாம் பரிசு உரூபா 150.00 மூன்றாம் பரிசு உரூபா 100.00 ஆறுதல் பரிசுகள் உரூபா 90.00 ஐந்து பேர்களுக்கு. நெறிமுறைகள் 1.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. 2.பிறமொழிச்சொற்கள் கலவாத தனித்தமிழில் நாடகங்கள் இயற்றப்பட வேண்டும் 3.நாடகங்கள் மதநம்பிக்கை தவிர்த்த பகுத்தறிவு,அறிவியல் முதலிய  புதிய கருப்பொருள்களில்…