‘தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!’  – சென்னையில் நடந்த எழுச்சிமிகு மாநாடு! “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல!” என்ற தலைப்பில், தை 21,2049 சனி பிப்ரவரி 3, 2018 அன்று சென்னையில்தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் எழுச்சிமிகு சிறப்பு மாநாடு நடைபெற்றது.  சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையிலுள்ள அண்ணா அரங்கில் காலை 9.30 மணியளவில் தொடங்கிய மாநாட்டின் முதல் நிகழ்வாக, பெண்ணாடம் இளநிலா கலைக் குழுவினரின் பறையாட்டம் நடைபெற்றது. ‘தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்’ என்ற தலைப்பில் நடந்த ஒளிப்படக் கண்காட்சியைத் தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர்…