தமிழினத்திற்கு   வாழ்வா ?   சாவா ?   1. அன்றுதொட்டே  இன்றுவரை அறத்தமிழை  இனத்தினை    அழிக்கின்ற கொள்கைநிறை நஞ்சாரிய நெஞ்சுடன் நன்றிகொன்று  நாடோறும் ஞாலமதில்   வாழ்பவர் நடுநிலையும் நயன்மையையும்  நாடாத   இனமதே  இன்றுமுற்றாய்  அழிப்பதற்கே  ஏறியுமே ஆட்சியில் இயற்றுகிற  சட்டமதை  எண்ணியுமே காத்திட ஒன்றிணைய  வேண்டுமென்றே உள்ளமதில்   தேருக ! ஒன்றிணைய வில்லையெனில் ஒண்டமிழும்  அழியுமே ! 2. தனதுநலம்  புறந்தள்ளித்  தமிழினத்தைக் காப்பதே தலையாய  கடனென்று  தமிழினமே  உணருதல் தனதுநல  முதற்படியாய்  நெஞ்சமதில் தேருக ! தமிழ்மொழியே  தன்னினத்தைக் காக்கவல்ல  தென்றுமே தனதுநெஞ்சில் …