கடந்த 25 ஆண்டுகளாகத், தமிழ் – தமிழர் உரிமைச் சிக்கல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் “தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்” மாதமிருமுறை இதழ் சார்பில் வழக்கம்போல் ‘பொங்கல் சிறப்பு மலர்’ வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்களுக்காகப் போராடும் பல்வேறு கட்சி, இயக்கத் தலைவர்களும், தமிழறிஞர்களும்,  குமுகாயச் செயற்பாட்டாளர்களும் இயற்றியப் படைப்புகள்  முந்தைய ஆண்டுகள்போல், இம்மலரிலும் வெளியிடப்பட்டுள்ளன.   சென்னையில் நடைபெற்று வரும் 37ஆவது புத்தகக் காட்சியின், 234ஆவது அரங்கில் அமைந்துள்ள தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் அரங்கில், இதழ் ஆசிரியரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித்…