உருச் சிதைந்த சிந்தனையில் தாய் மொழி தகர்த்து பிற மொழியால் முலாமிடும் செருக்கெடுத்த தருக்கருக்கு ஏதடா முகம்? முகமிழந்த முண்டங்கள் முகவரியும் தொலைத்த பின்னால் எதற்கடா வாழ்வு? ஏதடா வனப்பு? பிறப்பதில் பெறுவதல்ல இன அடையாளம்! பேறாய் பெற்ற தாய் மொழியே எம் முக அடையாளம்! மூத்த மொழி சரிந்து போக சொத்தை தமிழனாய் பார்த்திருப்பாயோ? தமிழன்னைக்கோர் துயர் என்றால் உனக்கென்று நினையாயோ? நேற்று வந்த மொழியெல்லாம் சேற்று வெள்ளமாய் அள்ளி செல்ல காற்றடித்தால் தொலைந்து போகும் துரும்போடா தமிழா நீ? பண்டைத் தமிழர்…