சுந்தரமூர்த்தி கவிதைகள் சுந்தரச் சிலேடைகள் மாணவரும் ஆடும் சிலேடை 1 அடைந்திருக்கும் ஓரிடத்தில் ஆளின்றேல் தாவும் கடைநிலையிற் கொம்படிக்கும் கத்தும்-இடைநின் றிழுக்க அசைபோட் டிறுதி விருந்தாம் எழுத்தறி வானாட்டுக் கீடு. பொருள் மாணவர்=வகுப்பறையில் அனைவரும் இருப்பர். ஆசான் இல்லாதபோது இங்குமங்கும் விளையாடுவர். படிக்காத கடை மாணவர் கொம்பால் அடிவாங்குவர். பள்ளிவராமல் உள்ளோர் சகமாணவர்களால் இழுத்து வரப்படுவர். அழுவர். கற்றதை அசைபோடுவர்.பின்னாளில் நல்ல விருந்தளிப்பர். ஆடு=கொட்டகையில் அடைந்து கிடக்கும். ஆளில்லை என்றால் இங்குமங்கும் தாவும் சேட்டை செய்யும் , சண்டையிடும் , கொம்பால் முட்டிக்கொள்ளும்.இடையிலே நின்றுபோனால்…