தாய்க்கோழியின் வருத்தம்   காடடைப்பான்1 தூக்கிச் செல்லுமோ என்றஞ்சிய தாய்க்கோழி, வேலியில் ஊர்ந்த பாம்பு கௌவிய குஞ்சை மீட்கக் கொக்கரிக்கும். என்நெஞ்சைப் படம்பிடித்து, நெடுமென வளர்ந்த கருமுள் முருக்கம் சிவப்பாய்ப் பூக்கும். அந்தி மந்தாரை அனைத்தும் கலங்கடிக்கும். பந்தல்கால் சுற்றிய பசுநிறக் கொடியில் பவழ மயிர்மாணிக்கம் பார்க்கும். கையெழுத்து  மறையும் வேளையில், அங்கே சேச மலையில் சிவப்பு மரத்தைச் சிரத்தையுடன் சீவிக் கொண்டிருப்பாய், இங்கே பால்சுவை பருகிய பூனைகள் சிவப்பாய் மொடமொடக்கும் காகிதக் கட்டுடன், அங்கே சுட்டு வதக்கிய உடல்களும் கூர்ங்கத்தி பட்டுச் செதுக்கிய…