[திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 1/9 தொடர்ச்சி] திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 2/9 ஆனால், ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்          பெய்யெனப் பெய்யும் மழை                                           (குறள்.55) என்னும் குறட்பாவிற்கு திருக்குறள் மக்கள் உரையில் (ஏறத்தாழ பதினாறு) பதிப்புகளில் பாவேந்தரை அடியொற்றி, “மனைவி பயன்மழை போன்றவள்” என்று உரை எழுதியவர், அண்மையில் வரும் பதிப்புகளில், “பத்தினி சொன்னால் மழை பெய்யும்” என்று அறிவியலுக்குப் புறம்பான உரை எழுதித் திருவள்ளுவரைத்  திடுக்கிட  வைப்பார். தீர்வுக்குத் தெய்வப் புலவரை நாடுகிறோம். குறளாசான் எழுத்தாணியால் காமத்துப் பாலில் 1192 -ஆம்…