திருவள்ளுவர் காட்டு நெறிகள் பல     தெய்வப்புலவர் தெளிவுறுத்தும் நெறிகள் பல. அவையனைத்தும் தனிமனித வளர்ச்சிக்கும் சமுதாய மலர்ச்சிக்கும் உலக ஒருமைப்பாட்டிற்கும் உறுதுணை புரிவன. திருவள்ளுவர் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வழிமுறைகளையும், குறள்நெறிகளையும் ஆய்ந்தும் தோய்ந்தும் தொகுத்தும் பகுத்தும் தந்துள்ளார். அவற்றை உய்த்துணர்ந்து போற்றி நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடித்து நானிலத்தில் மேனிலை அடைவது ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும் ஆகும். முனைவர் சேயோன்: திருவள்ளுவர் காட்டும் நெறிகள்: ஒழுக்க நெறி: பக்கம் 95