ஏ….இறையே…! – இருவரியில் சொல்வேன் நல்லவற்றைக் கிள்ளித் தருகிறாய்!; அல்லவற்றைஅள்ளித் தருகிறாய்! ஏன்? ​வாழும் வழிகேட்டு நிற்பவரை வீழ்த்தி வலிகூட்டிச் செல்கிறாய் ஏன்​ ? துதித்தவரைத் துன்பத்துள் தள்ளும் தவறு; மதிதெளிந்த செய்கையா கூறு சோதனைமேல் சோதனைதந்து உம்குடியை வேதனைக்குள்தள்ளுவதா சாதனை?​ சொல்மெய்தானோ! “இல்லையென்று சொல்லவில்லை; நல்லது தான்இருந்தால்” என்போரின் கூற்று ​ஏன் இப்படி ? ​ பிடியும்…என் சாபம் படியும் : துதிப்பவரை எற்றி மிதிப்பவரை, போற்றிஇறை என்பவரைத் தூற்றும் உலகு இரைஞ்சும் அடியவரைக் கைவிடு வோரை இறையல்ல என்று விடு…