சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வந்தவர்களை மாணவி காயத்திரி வரவேற்றார்.பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி, தேசிய அறிவியல் நாள் தொடர்பாகவும், அதன் சிறப்பு குறித்தும் விளக்கமாக பேசினார். ஆசிரியை செல்வமீனாள் அறிவியல் ஆய்வுகளை எளிய முறையில் மாணவர்களுக்குச் செய்து காண்பித்துச் செயல் விளக்கம் அளித்தார். விழாவில் 6ஆம் வகுப்பு மாணவி காவியா, சென்னை அக்கினி கல்வி நிறுவனங்களின் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல்…