(ஆவணி 1, 2045 /ஆகத்து 17, 2014 இதழின் தொடர்ச்சி) 10.    மன்னராட்சி ஒழிந்தது.. மன்னர் இன்னும் வாழ்கிறார்.. சியான்(Xi’an) என்றழைக்கப்படும் இந்நகரம் முன்பு சங்கன்(Chang’an) என அழைக்கப்பட்டு வந்துள்ளது. கி.பி. 618லிருந்து 904 வரை (இ)டாங்கு அரச குடும்பத்தினர், சங்கன் பகுதியைத் தலைநகரமாகக் கொண்டே ஆட்சி புரிந்துள்ளனர். முந்தைய மன்னராட்சிக் காலங்களை விட, (இ)டாங்கு மன்னராட்சிக் காலத்தில்தான் சீனாவில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதென பல வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். மன்னராட்சி கோலோச்சிய இந்நகரத்தில், மன்னராட்சி மரபின் அடையாளமாகக் காணப்படும் சில இடங்களைச்…